யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்கைதீவுக்கு அருகில் மக்கள் பலர் வசித்து வருகின்றனர். அத்துடன் காக்கைதீவில் மீன்சந்தை உள்ளதால் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வருகை தந்து மீனைப் பெற்றுச்செல்கின்றனர். மேலும் வட்டுக்கோட்டைக்குச் செல்லும் பிரதான வீதி காக்கைதீவு என்பதால் அவ்வழியாக போக்குவரத்தும் இடம்பெற்று வருகின்றது.
அதிகமான மக்கள் நடமாட்டமுள்ள காக்கைதீவுப் பகுதியில் நீண்டகாலமாக மலக்கழிவுகள் மற்றும் சுகாதார கழிவுகள் அதிகமாகக் கொட்டப்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி அந்த வீதியால் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமூகத்திற்கு ஒவ்வாத வகையில் சுகாதார சீர்கேடாகக் காணப்படும் காக்கைதீவுக் கழிவுகளை உடன் அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை பிரதேசசபை உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
காக்கைதீவில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அவலம் யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கைதீவுக்கு அருகில் மக்கள் பலர் வசித்து வருகின்றனர். அத்துடன் காக்கைதீவில் மீன்சந்தை உள்ளதால் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வருகை தந்து மீனைப் பெற்றுச்செல்கின்றனர். மேலும் வட்டுக்கோட்டைக்குச் செல்லும் பிரதான வீதி காக்கைதீவு என்பதால் அவ்வழியாக போக்குவரத்தும் இடம்பெற்று வருகின்றது. அதிகமான மக்கள் நடமாட்டமுள்ள காக்கைதீவுப் பகுதியில் நீண்டகாலமாக மலக்கழிவுகள் மற்றும் சுகாதார கழிவுகள் அதிகமாகக் கொட்டப்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி அந்த வீதியால் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமூகத்திற்கு ஒவ்வாத வகையில் சுகாதார சீர்கேடாகக் காணப்படும் காக்கைதீவுக் கழிவுகளை உடன் அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை பிரதேசசபை உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.