• May 17 2024

காதலால் விபரீதம்; எச்சரித்த காதலியின் சகோதரர்களை கடுமையாக தாக்கிய மாணவன்! கெழும்பில் பரபரப்பு

Chithra / Apr 29th 2024, 8:19 am
image

Advertisement

 

கொழும் - முல்லேரியா பகுதியில் காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் பெண் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 15 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக  முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடன் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சில காலமாக காதல் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த நிலையில் அதனை மாணவி நிராகரித்துள்ளார்.

மாணவன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, இது குறித்து தனது மூத்த சகோதரரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அண்மையில் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் குறித்த மாணவியின் சகோதரனும் கலந்துகொண்டு, குறித்த மாணவனை சந்தித்து  சகோதரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

பதிலுக்கு, மாணவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து அவரது நண்பர்கள் குழுவை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

பாடசாலை வளாகத்திற்கு வெளியே, குழு சகோதரர் தரப்பினரைத் தாக்கியுள்ளது.

மாணவியின் சகோதரர்கள் இருவரையும், சகோதரர் ஒருவரின் மனைவியையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த இரு சகோதரர்களும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காதலால் விபரீதம்; எச்சரித்த காதலியின் சகோதரர்களை கடுமையாக தாக்கிய மாணவன் கெழும்பில் பரபரப்பு  கொழும் - முல்லேரியா பகுதியில் காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் பெண் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 15 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக  முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லேரியா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடன் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சில காலமாக காதல் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த நிலையில் அதனை மாணவி நிராகரித்துள்ளார்.மாணவன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, இது குறித்து தனது மூத்த சகோதரரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.இதையடுத்து அண்மையில் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் குறித்த மாணவியின் சகோதரனும் கலந்துகொண்டு, குறித்த மாணவனை சந்தித்து  சகோதரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.பதிலுக்கு, மாணவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து அவரது நண்பர்கள் குழுவை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.பாடசாலை வளாகத்திற்கு வெளியே, குழு சகோதரர் தரப்பினரைத் தாக்கியுள்ளது.மாணவியின் சகோதரர்கள் இருவரையும், சகோதரர் ஒருவரின் மனைவியையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த இரு சகோதரர்களும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement