• Sep 23 2024

68 பேருடன் பயணித்த விமானம் நேபாளத்தில் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

Chithra / Jan 15th 2023, 12:45 pm
image

Advertisement

நேபாளம் – பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத்தில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணிகளை மீட்பதற்கான மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


நேபாளத்தில் விமான விபத்துக்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 30 விமான விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.

2022ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.

68 பேருடன் பயணித்த விமானம் நேபாளத்தில் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம் நேபாளம் – பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத்தில் தீ பரவியுள்ளது.தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணிகளை மீட்பதற்கான மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேபாளத்தில் விமான விபத்துக்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 30 விமான விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.2022ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement