• Sep 08 2024

மகளை கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு இடையூறு; தாயார் கைது - தப்பிஓடிய பெண்..!

Chithra / Jun 4th 2024, 4:38 pm
image

Advertisement

 


பல வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல்,  சந்தேக நபருக்குத் தப்பிச் செல்ல உதவி செய்தல், 

பெண்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவர் அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபரின் மகள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், 

அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மகளை கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு இடையூறு; தாயார் கைது - தப்பிஓடிய பெண்.  பல வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல்,  சந்தேக நபருக்குத் தப்பிச் செல்ல உதவி செய்தல், பெண்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, இவர் அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், இச்சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபரின் மகள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement