சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களில் இருக்கும் இடத்தை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் எச்சரித்துள்ளார்
பத்தரமுல்லையில் உள்ள போலீசார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவிற்காக தேர்ந்தெடுக்கும் பேருந்து அல்லது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு கூறியுள்ளார்.
வாகன ஓட்டுநரைப் பற்றிய சரியான புரிதல் முக்கியம் என்றும் பயணத்தின்போது உங்கள் இருப்பிடத்தை செல்பி புகைப்படம் மூலம் பகிர்வது குற்றவாளிகள் அல்லது வீட்டை நோட்டமிடும் ஒருவருக்கு சாதகமாக இருக்கக்கூடும் என தெரிவித்தார்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை யாரும் அறிய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் தெரிவித்துள்ளது போல், சமூக வலைத்தளங்களில் இடுகைகள் செய்தல் உங்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என மேலும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
"நாம் அனைவரும் பண்டிகைக் காலத்தை நோக்கி நகர்கிறோம். குறிப்பாக உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக நாம் கிராமத்தை விட்டு புறப்படுகிறோம்.
இந்த நாட்களில் உங்களது பயண இலக்குகள் குறித்து உங்களது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தின் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ நீங்களே அறிவிப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
நீங்கள் நுவரெலியாவில் இருக்கிறீர்கள், நீங்கள் காலியில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் கதிர்காமத்தில் இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை செல்பி புகைப்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முறையை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது பொருத்தமானதல்ல.
உங்களைத் பின்தொடரும் ஒரு குற்றவாளிக்கோ அல்லது உங்களைப் பற்றியோ, உங்கள் வீட்டைப் பற்றியோ நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ இது மிகவும் சாதகமான விடயமாக அமையலாம்.
எனவே, நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வேறு எவரும் தெரிந்து கொள்ளாத வகையில் நடப்பதால் அது நன்மையை ஏற்படுத்துவதாக அமையும்.
அதேபோல், நீங்கள் இந்தப் பயணத்திற்காகப் பயன்படுத்தும் வாகனம், அதன் சாரதி என்பனவற்றில் நீங்கள் திருப்தி அடைவதை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா செல்வோருக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களில் இருக்கும் இடத்தை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் எச்சரித்துள்ளார்பத்தரமுல்லையில் உள்ள போலீசார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.சுற்றுலாவிற்காக தேர்ந்தெடுக்கும் பேருந்து அல்லது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு கூறியுள்ளார்.வாகன ஓட்டுநரைப் பற்றிய சரியான புரிதல் முக்கியம் என்றும் பயணத்தின்போது உங்கள் இருப்பிடத்தை செல்பி புகைப்படம் மூலம் பகிர்வது குற்றவாளிகள் அல்லது வீட்டை நோட்டமிடும் ஒருவருக்கு சாதகமாக இருக்கக்கூடும் என தெரிவித்தார்.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை யாரும் அறிய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.போலீசார் தெரிவித்துள்ளது போல், சமூக வலைத்தளங்களில் இடுகைகள் செய்தல் உங்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என மேலும் தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,"நாம் அனைவரும் பண்டிகைக் காலத்தை நோக்கி நகர்கிறோம். குறிப்பாக உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக நாம் கிராமத்தை விட்டு புறப்படுகிறோம். இந்த நாட்களில் உங்களது பயண இலக்குகள் குறித்து உங்களது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தின் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ நீங்களே அறிவிப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீங்கள் நுவரெலியாவில் இருக்கிறீர்கள், நீங்கள் காலியில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் கதிர்காமத்தில் இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை செல்பி புகைப்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முறையை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது பொருத்தமானதல்ல. உங்களைத் பின்தொடரும் ஒரு குற்றவாளிக்கோ அல்லது உங்களைப் பற்றியோ, உங்கள் வீட்டைப் பற்றியோ நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ இது மிகவும் சாதகமான விடயமாக அமையலாம். எனவே, நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வேறு எவரும் தெரிந்து கொள்ளாத வகையில் நடப்பதால் அது நன்மையை ஏற்படுத்துவதாக அமையும். அதேபோல், நீங்கள் இந்தப் பயணத்திற்காகப் பயன்படுத்தும் வாகனம், அதன் சாரதி என்பனவற்றில் நீங்கள் திருப்தி அடைவதை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.