• Sep 28 2024

நண்பனாக பழகி ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம் -குழம்பி தவிக்கும் பொலிஸார்!

Tamil nila / Jun 21st 2024, 8:13 pm
image

Advertisement

நண்பனாகப் பழகி அவருக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் 20 வயதுடைய இளைஞருக்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவர் தற்போது தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முதற் கட்டமாக கடந்த 16ஆம் திகதி சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அவர் வழங்கிய வாக்கு மூலம் பொலிஸாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சந்தேகநபருடன் தான் சில காலமாக பழகிவருவதாகவும், தனக்கு தெரியாமலேயே அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை செய்ததே தனக்கு தெரியாது எனவும் கண்விழித்து பார்த்த போது, ''இப்போது நீ ஒரு பெண். உன்னை லக்னோவுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்கு நீ எதிர்ப்பு தெரிவித்தால் உன் தந்தையைக் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். வைத்தியசாலையில் என் அனுமதி இல்லாமலே எனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது " என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

நண்பனாக பழகி ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம் -குழம்பி தவிக்கும் பொலிஸார் நண்பனாகப் பழகி அவருக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் 20 வயதுடைய இளைஞருக்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இவர் தற்போது தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முதற் கட்டமாக கடந்த 16ஆம் திகதி சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.அவரிடம் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.அவர் வழங்கிய வாக்கு மூலம் பொலிஸாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சந்தேகநபருடன் தான் சில காலமாக பழகிவருவதாகவும், தனக்கு தெரியாமலேயே அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.சிகிச்சை செய்ததே தனக்கு தெரியாது எனவும் கண்விழித்து பார்த்த போது, ''இப்போது நீ ஒரு பெண். உன்னை லக்னோவுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்கு நீ எதிர்ப்பு தெரிவித்தால் உன் தந்தையைக் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். வைத்தியசாலையில் என் அனுமதி இல்லாமலே எனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது " என குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement