• Oct 03 2024

கிண்ணியாவில் காய்த்துக் குலுங்கும் மாதுளம் பழங்கள்.. ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்..!

Tamil nila / Jan 14th 2024, 1:59 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது. 

குறித்த மாதுளை தோட்டச் செய்கையை அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றனர். 



தனியார் ஒருவரின் முயற்சியினால் இவ் மாதுளை தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ 1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுவதுடன் கொள்வனவிலும் ஈடுபடுகிறார்கள். 

மாதுளை தோட்டச் செய்கை கிண்ணியா வரலாற்றில் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. வட்டமடு பகுதியில் ஏனைய சேனைப் பயிர்ச் செய்கை பலராலும் மேற்கொள்ளப்பட்டாலும் விசேடமாக மாதுளை செய்கை ஒரு புது விதமான உற்பத்தி செய்கையாக பார்க்கப்படுகிறது. பல மருத்துவ நற்குணங்களை கொண்ட மாதுளை பழங்களுக்கு அதிக கிராக்கியாகவும் காணப்படுகிறது. 

மக்களின் பார்வையில் அதிக வரவேற்பை பெற்று விளங்குவதுடன் விசேடமாக அதிக பார்வையாளர்களை கிண்ணியா மாதுளை தோட்டம் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தரமான பழங்களை கொண்ட இப் பழம் ஊடாக பல நன்மைகளை பெறக்கூடியதுமாக மருத்துவ குறிப்புக்கள் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கிண்ணியா பகுதியில் கச்சான் சோளவச் செய்கை அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும் இது ஒரு புது வகையான உற்பத்தியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 



உள்ளூர் மக்கள் மாத்திரமன்றி வெளியூர் பயணிகளும் கொள்வனவு செய்கின்றனர். 


கிண்ணியாவில் காய்த்துக் குலுங்கும் மாதுளம் பழங்கள். ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள். திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது. குறித்த மாதுளை தோட்டச் செய்கையை அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் ஒருவரின் முயற்சியினால் இவ் மாதுளை தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ 1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுவதுடன் கொள்வனவிலும் ஈடுபடுகிறார்கள். மாதுளை தோட்டச் செய்கை கிண்ணியா வரலாற்றில் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. வட்டமடு பகுதியில் ஏனைய சேனைப் பயிர்ச் செய்கை பலராலும் மேற்கொள்ளப்பட்டாலும் விசேடமாக மாதுளை செய்கை ஒரு புது விதமான உற்பத்தி செய்கையாக பார்க்கப்படுகிறது. பல மருத்துவ நற்குணங்களை கொண்ட மாதுளை பழங்களுக்கு அதிக கிராக்கியாகவும் காணப்படுகிறது. மக்களின் பார்வையில் அதிக வரவேற்பை பெற்று விளங்குவதுடன் விசேடமாக அதிக பார்வையாளர்களை கிண்ணியா மாதுளை தோட்டம் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.தரமான பழங்களை கொண்ட இப் பழம் ஊடாக பல நன்மைகளை பெறக்கூடியதுமாக மருத்துவ குறிப்புக்கள் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கிண்ணியா பகுதியில் கச்சான் சோளவச் செய்கை அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும் இது ஒரு புது வகையான உற்பத்தியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மாத்திரமன்றி வெளியூர் பயணிகளும் கொள்வனவு செய்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement