யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு நேற்று (22.01.2023) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது.
மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட் கலந்து சிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் திணைக்களங்களுக்கிடையே பொங்கல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலும் முட்டி உடைத்தல் மற்றும் சங்கீதக் கதிரை உள்ளிட்ட பொது விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் யாழ். மாநகரசபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், மாநகர சபை பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.