• May 17 2024

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு...! மன்னாரில் மக்கள் அவதி....!samugammedia

Sharmi / Nov 8th 2023, 1:33 pm
image

Advertisement

நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன் கிழமை(08) தொடக்கம் நாளை வியாழக்கிழமை(09) வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் தபாலக ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்

இன்றையதினம் அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளிலும் இருந்து ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளையதினமும் கடமைகளை மேற்கொள்ளாது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்

மிகவும் பழமையும் பாரம்பரியும் நிறைந்த நுவரெலியா தபாலக கட்டிடத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஒன்றினைந்த தபால் சங்க ஊழியர்கள் இலங்கை முழுவதும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

குறித்த போராட்டத்தினால் பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்ற தபாலகம் வருகை தந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.



தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு. மன்னாரில் மக்கள் அவதி.samugammedia நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன் கிழமை(08) தொடக்கம் நாளை வியாழக்கிழமை(09) வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் தபாலக ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்இன்றையதினம் அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளிலும் இருந்து ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளையதினமும் கடமைகளை மேற்கொள்ளாது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்மிகவும் பழமையும் பாரம்பரியும் நிறைந்த நுவரெலியா தபாலக கட்டிடத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஒன்றினைந்த தபால் சங்க ஊழியர்கள் இலங்கை முழுவதும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்குறித்த போராட்டத்தினால் பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்ற தபாலகம் வருகை தந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement