மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சிரேஸ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்மொழியப்பட்ட செயல்முறைக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாகவும், செயல்முறையை விரைவுபடுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு மேலதிகமாக, தற்போதைய சேவையில் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்கொடை, ஓய்வூதியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் அதிரடி. samugammedia மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சிரேஸ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.முன்மொழியப்பட்ட செயல்முறைக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாகவும், செயல்முறையை விரைவுபடுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு மேலதிகமாக, தற்போதைய சேவையில் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்கொடை, ஓய்வூதியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.இந்நிகழ்வில் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.