சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து மலேசியா வழியாக ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.
நேற்றிரவு(27) மலேசியா விமான சேவை விமானம் ஒன்றில் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் புதிய ஆளுனர்கள் சிலரது நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.