• Sep 20 2024

50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி!

Chithra / Sep 9th 2024, 1:08 pm
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் அடுத்த வாரத்திற்குள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்குத் தேவையான பணம் ஏற்கனவே நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரச அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சகத்தின் ஏற்பாடுகளுடன் அதற்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் அடுத்த வாரத்திற்குள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அச்சடிக்கும் பணிகளுக்குத் தேவையான பணம் ஏற்கனவே நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரச அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க அச்சகத்தின் ஏற்பாடுகளுடன் அதற்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement