வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
பகல் இரவு பொங்கலாக இடம்பெறும் நிகழ்வில் பல பகுதிகளிலிருந்தும் பெருமாளவான அடியவர்கள் தங்களுடைய நேர்த்திகளை காவடிகளாகவும், பாற்ச்செம்பாகவும், தூக்கு காவடி, பறவைக்காவடி, பொங்கலாகவும் நிறைவேற்றி வருகின்றனர்.
அடியவர்களின் நலன் கருதி போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கடமைகளுக்காக 500 மேற்பட்ட பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் சிவில் உடைதரித்த பொலிஸார் ஆலயத்துக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்புக்காக இரவு பகல் என பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியிலிருந்து புறப்பட்ட பண்டவண்டில்கள் இன்று மாலை ஆலயத்தை வந்தடைந்தவுடன் பண்டகங்கள் எடுக்கப்பட்டு பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
புளியம்பொக்கணை நாகதம்பிரானின்வருடாந்த பொங்கல் நிகழ்வு; குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. பகல் இரவு பொங்கலாக இடம்பெறும் நிகழ்வில் பல பகுதிகளிலிருந்தும் பெருமாளவான அடியவர்கள் தங்களுடைய நேர்த்திகளை காவடிகளாகவும், பாற்ச்செம்பாகவும், தூக்கு காவடி, பறவைக்காவடி, பொங்கலாகவும் நிறைவேற்றி வருகின்றனர்.அடியவர்களின் நலன் கருதி போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கடமைகளுக்காக 500 மேற்பட்ட பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் சிவில் உடைதரித்த பொலிஸார் ஆலயத்துக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்புக்காக இரவு பகல் என பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியிலிருந்து புறப்பட்ட பண்டவண்டில்கள் இன்று மாலை ஆலயத்தை வந்தடைந்தவுடன் பண்டகங்கள் எடுக்கப்பட்டு பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.