• Sep 18 2024

யாழில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம்..!

Sharmi / Sep 14th 2024, 1:45 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(14) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது யாழில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, யாழ் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இத் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், முன்னாள்  யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


யாழில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(14) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.இதன்போது யாழில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, யாழ் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இத் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், முன்னாள்  யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement