வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(01) கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.
அந்தவகையில் கனடா உயர்ஸ்தானிகர் வாசஸ்தலத்திலே கனடா உயர்ஸ்தானிகரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்துள்ளனர்
குறிப்பாக, கனடா உயர்ஸ்தானிகர், ஐரோப்பிய யூனியனின் உயர்ஸ்தானிகர்,சுவிஸ் உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவின் உயர்தானிகர், நியூஸ்லாந்து உயர்தானிகர், அவுஸ்ரேலியா உயர்தானிகர், பிரான்ஸ் உயர்தானிகர் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத
நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு
மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய
வலியுறுத்தி இன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது
நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.