புத்தளம் பாலாவி விமானப்படை முகாமில் அநாதரவாக நிலையில் நின்ற மான் குட்டியை படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மான் குட்டியை புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த மான் குட்டி மேலதிக சிகிச்சையளிப்பதற்காக நிகவெரெட்டிய மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டாதக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த மான் 4 மாதக் குட்டியென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.