• Aug 19 2026

ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சமித்புர சது கைது!

Chithra / Aug 18th 2026, 9:32 am
image


சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் சமித்புர சது என்றழைக்கப்படும் திமுது சதுரங்க இன்று அதிகாலை ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வூட்லர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் சமித்புர சதுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலும், கைக்குண்டுகளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், ஓமானில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சமித்புர சது கைது சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் சமித்புர சது என்றழைக்கப்படும் திமுது சதுரங்க இன்று அதிகாலை ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வூட்லர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் சமித்புர சதுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும், கைக்குண்டுகளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், ஓமானில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement