• May 17 2024

மர்மமான முறையில் உயிரிழந்த 8 மாத குழந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Aug 27th 2023, 3:15 pm
image

Advertisement

திடீர் சுவாசக் கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 8 மாத குழந்தையின் உடற்கூறுகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அரச இரசாயன பகுவாய்வாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி யு.ஜி.பி ஜயரத்ன வழங்கிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பரவிய மெனிங்கோகோகல் பக்டீரியா குறித்த குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்ததை அடுத்து உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சட்ட வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


மர்மமான முறையில் உயிரிழந்த 8 மாத குழந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia திடீர் சுவாசக் கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 8 மாத குழந்தையின் உடற்கூறுகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அரச இரசாயன பகுவாய்வாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி யு.ஜி.பி ஜயரத்ன வழங்கிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பரவிய மெனிங்கோகோகல் பக்டீரியா குறித்த குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்ததை அடுத்து உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சட்ட வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement