முதன்முறையாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம்(24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.