• Oct 25 2024

தாக்குதல் அச்சம் - விமான நிலையம் உட்பட பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

Chithra / Oct 24th 2024, 2:16 pm
image

Advertisement

 

நாட்டில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, அறுகம்பை பகுதிக்கு மேலதிகமாக பொத்துவில், மிரிஸ்ஸ, வெலிகம, ஹிக்கடுவ, காலி, திருகோணமலை, நீர்கொழும்பு, நிலாவெளி, பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தெஹிவளையில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 21 வயதான சந்தேக நபர் மாவனெல்ல - கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார்  தெரிவித்தனர்.

அவர் அப்பகுதியில் இருந்ததற்கான திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறியதால் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதல் அச்சம் - விமான நிலையம் உட்பட பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு  நாட்டில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அறுகம்பை பகுதிக்கு மேலதிகமாக பொத்துவில், மிரிஸ்ஸ, வெலிகம, ஹிக்கடுவ, காலி, திருகோணமலை, நீர்கொழும்பு, நிலாவெளி, பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை தெஹிவளையில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 21 வயதான சந்தேக நபர் மாவனெல்ல - கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார்  தெரிவித்தனர்.அவர் அப்பகுதியில் இருந்ததற்கான திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறியதால் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement