நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அதற்கமைய, நேற்று புதன்கிழமை (25) காலை மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெலிச - வெலிஹேன வீதியிலும், முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், மினுவாங்கொடை மற்றும் அங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார்சைக்கிள் தொடர் திருட்டு - சந்தேகநபர்கள் இருவர் கைது நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.அதற்கமைய, நேற்று புதன்கிழமை (25) காலை மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெலிச - வெலிஹேன வீதியிலும், முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், மினுவாங்கொடை மற்றும் அங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.