• Sep 08 2024

கொழும்பில் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 26th 2024, 7:49 am
image

Advertisement


கொழும்பு கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இதில் 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன் என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 

அத்துதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண 56 வயதுடைய ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் இருந்த பெண் மற்றும் ஆண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு பொலிஸார் வெளியிட்ட தகவல் கொழும்பு கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.நேற்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன் என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அத்துதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண 56 வயதுடைய ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் இருந்த பெண் மற்றும் ஆண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement