இலங்கையில் ஆறாயிரம் பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே ஜயசுமண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மூவாயிரத்தில் ஒருவர் எயிட்ஸ் நோயாளர் எனவும் தெரிவித்ததுடன் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய மசோதா பலவீனமாக உள்ளது. அந்த சட்டத்தில் தாமதமின்றி திருத்தம் கொண்டு வர வேண்டும்.
நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் 50 மருந்தகங்களை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைப்பில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், விரைவாக விசாரித்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இலங்கையில் எயிட்ஸ் நோய் அதிகரிக்கும் போக்கு காணப்படுகின்றது. இலங்கையில் தற்போது 6000 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.