மதவாச்சி - கடவத்தகம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர், மூத்த மகனுடன் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறின் போது, மரக்கட்டை துண்டால் தாக்கப்பட்டு, வீட்டின் முற்றத்தில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையை அருகிலுள்ள வீட்டில் வசித்த இளைய மகன் முதலில் கண்டுள்ளார்.
42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை அடித்துக் கொன்ற மகன்; மது விருந்தில் ஏற்பட்ட விபரீதம் மதவாச்சி - கடவத்தகம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இச் சம்பவத்தில் உயிரிழந்தவர், மூத்த மகனுடன் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறின் போது, மரக்கட்டை துண்டால் தாக்கப்பட்டு, வீட்டின் முற்றத்தில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அருகிலுள்ள வீட்டில் வசித்த இளைய மகன் முதலில் கண்டுள்ளார்.42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.