நவம்பர் மாதத்திற்கான பருவகால அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் வசதி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இதற்கிடையில், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி வெளியான அறிவிப்பு நவம்பர் மாதத்திற்கான பருவகால அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் வசதி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதற்கிடையில், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.