• Dec 11 2025

சீனாவில் தூதரகம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு திட்டம்

dorin / Nov 17th 2025, 9:29 pm
image

சீனாவில் மேலுமொரு தூதரகத்தை நிறுவுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து அதிகளவு வெளிநாட்டுப் பயணிகளை வரவழைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய 2026 ஆரம்பத்தில் சீனாவின் செங்டு நகரில் மேற்படி கொன்சல் ஜெனரல் அலுவலகம் அமையும் என்று நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

சீனாவில் சில நகரங்களில் இலங்கையின் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையிலேயே புதிய அலுவலகம் அமைகின்றது.

அதேபோல் பிரேசிலிலும் கொன்சல் ஜெனரல் அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என குறிப்பிட்டார்

சீனாவில் தூதரகம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு திட்டம் சீனாவில் மேலுமொரு தூதரகத்தை நிறுவுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.சீனாவில் இருந்து அதிகளவு வெளிநாட்டுப் பயணிகளை வரவழைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இதற்கமைய 2026 ஆரம்பத்தில் சீனாவின் செங்டு நகரில் மேற்படி கொன்சல் ஜெனரல் அலுவலகம் அமையும் என்று நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் சீனாவில் சில நகரங்களில் இலங்கையின் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையிலேயே புதிய அலுவலகம் அமைகின்றது.அதேபோல் பிரேசிலிலும் கொன்சல் ஜெனரல் அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement