• Sep 17 2024

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு கூட்டம் இன்று..!

IMF
Chithra / Jun 12th 2024, 9:10 am
image

Advertisement

 

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று  கலந்துரையாடவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 

2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து செயற்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் நம்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கையிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் அண்மையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு கூட்டம் இன்று.  இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று  கலந்துரையாடவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து செயற்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.அத்துடன் கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் நம்புவதாகவும் அவர் கூறினார்.மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கையிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் அண்மையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement