• Sep 17 2024

பூமிக்கு திரும்பவுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்- சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் சிக்கல்..!

Sharmi / Sep 6th 2024, 12:19 pm
image

Advertisement

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்றையதினம்(06) ஆளே இல்லாமல் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஜூன் 14ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். 

எனினும், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தாமதிக்கச் செய்தது. 

இதன்படி ஜூன் 26 ஆம் திகதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.

அதற்கு முன்னதாக அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான வேலைத்திட்டங்களை நாசாவும் போயிங் நிறுவனமும் நிறைவு செய்திருந்தன.

இந்த நிலையில் இன்றையதினம்(6) ஆம் திகதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கும்  என கூறப்படுகின்றது.

இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் அல்லது வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரம் இந்தப் பயணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைய 6 மணி நேரமாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும். 

அதாவது, நாளையதினம்(07) அதிகாலை 12.03 மணிக்கு திட்டமிட்டப்படி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் பூமிக்குத் திரும்பவார்கள் என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


பூமிக்கு திரும்பவுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்- சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் சிக்கல். சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்றையதினம்(06) ஆளே இல்லாமல் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஜூன் 14ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். எனினும், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தாமதிக்கச் செய்தது. இதன்படி ஜூன் 26 ஆம் திகதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.அதற்கு முன்னதாக அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான வேலைத்திட்டங்களை நாசாவும் போயிங் நிறுவனமும் நிறைவு செய்திருந்தன.இந்த நிலையில் இன்றையதினம்(6) ஆம் திகதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கும்  என கூறப்படுகின்றது.இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் அல்லது வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரம் இந்தப் பயணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைய 6 மணி நேரமாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும். அதாவது, நாளையதினம்(07) அதிகாலை 12.03 மணிக்கு திட்டமிட்டப்படி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் பூமிக்குத் திரும்பவார்கள் என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement