• Oct 05 2024

தான் பயிற்றுவிக்கும் பஸ்ஸில் நசுங்கியே உயிரைவிட்ட மாணவன் - ஆனமடுவவில் சோகம்

Chithra / Oct 4th 2024, 7:25 am
image

Advertisement


ஆனமடுவவில் வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பஸ்ஸில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை நெறியை பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அதே பஸ்ஸில் மோதியதில் பலத்த காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆனமடுவ மஹா உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சாமிக்க பிரபாத் பெர்னாண்டோ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பேருந்து தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் வைத்து பழுது நீக்கும் (வயரிங்) பணிக்காக வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென மாணவன் அதில் ஏறி வழுக்கி, பயணித்த அதே பேருந்தின் அடியில் விழுந்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த மாணவன் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் கைகளால் பழுதுபார்த்த அதே பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்து ஆனமடுவ பொலிஸாரால் பொறுப்பேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தான் பயிற்றுவிக்கும் பஸ்ஸில் நசுங்கியே உயிரைவிட்ட மாணவன் - ஆனமடுவவில் சோகம் ஆனமடுவவில் வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பஸ்ஸில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை நெறியை பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அதே பஸ்ஸில் மோதியதில் பலத்த காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.ஆனமடுவ மஹா உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சாமிக்க பிரபாத் பெர்னாண்டோ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பேருந்து தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் வைத்து பழுது நீக்கும் (வயரிங்) பணிக்காக வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென மாணவன் அதில் ஏறி வழுக்கி, பயணித்த அதே பேருந்தின் அடியில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் கைகளால் பழுதுபார்த்த அதே பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்து ஆனமடுவ பொலிஸாரால் பொறுப்பேற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement