• Sep 16 2024

நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற மாணவன் மாயம்!

Chithra / Sep 6th 2024, 2:49 pm
image

Advertisement


காலி - நெலுவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர். 

ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்மூழ்கிக் காணாமல் போன மாணவனை காலி கடற்படைத் தளத்திற்கு வந்த  குழுவொன்று தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக ஜின் கங்கையில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற மாணவன் மாயம் காலி - நெலுவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர். ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்மூழ்கிக் காணாமல் போன மாணவனை காலி கடற்படைத் தளத்திற்கு வந்த  குழுவொன்று தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக ஜின் கங்கையில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement