• May 04 2024

200 கடனுக்காக மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்..!Samugammedia

Tamil nila / Dec 21st 2023, 9:05 pm
image

Advertisement

உத்தரபிரதேசத்தில் ரூ.200 கடனை திருப்பித் தர இயலாத மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கி வீடியோ வெளியிட்ட அவரது நண்பர் மற்றும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிடலாம் என கூறி அழைத்துச் சென்றனர்.

ஆனால், பின்னர் தான் தெரியவந்தது. அது நண்பரின் கூட்டாளிகள் என்பது. காட்டுப் பகுதியில் மேலும் இருவர் சேர்ந்து ரூ.200 கடன் பெற்ற மாணவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கூறினர். தன்னிடம் தற்போது பணம் இல்லை என கூறியதால், அவர்கள் அனைவரும் அந்த மாணவரை அரை நிர்வாணப்படுத்தினர்.

மேலும், மது அருந்தச்சொல்லி வற்புறுத்தி, கம்புகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ததோடு பொலிஸில் புகார் அளி்த்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்


200 கடனுக்காக மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்.Samugammedia உத்தரபிரதேசத்தில் ரூ.200 கடனை திருப்பித் தர இயலாத மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கி வீடியோ வெளியிட்ட அவரது நண்பர் மற்றும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிடலாம் என கூறி அழைத்துச் சென்றனர்.ஆனால், பின்னர் தான் தெரியவந்தது. அது நண்பரின் கூட்டாளிகள் என்பது. காட்டுப் பகுதியில் மேலும் இருவர் சேர்ந்து ரூ.200 கடன் பெற்ற மாணவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கூறினர். தன்னிடம் தற்போது பணம் இல்லை என கூறியதால், அவர்கள் அனைவரும் அந்த மாணவரை அரை நிர்வாணப்படுத்தினர்.மேலும், மது அருந்தச்சொல்லி வற்புறுத்தி, கம்புகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ததோடு பொலிஸில் புகார் அளி்த்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement