• May 20 2024

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

Chithra / May 8th 2024, 7:37 am
image

Advertisement


கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்துள்ளார்

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.

மாணவன் தனது அறையில் உள்ள மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் எடுத்த விபரீத முடிவு. கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்துள்ளார்கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.மாணவன் தனது அறையில் உள்ள மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement