• Sep 28 2024

கைக்குண்டு ஒன்றை மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்ற மாணவனால் பரபரப்பு!

Chithra / Jun 20th 2024, 2:10 pm
image

Advertisement

 

கண்டி, ஹசலக்க பிரதேசத்தில் மாணவர் ஒருவர் கைக்குண்டு ஒன்றை மேலதிக வகுப்புக்குக் கொண்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் இந்த கைக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர், இந்த மாணவன் கைக் குண்டை தனது மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மேலதிக வகுப்பு ஆசிரியரிடம் அதனைக் காண்பித்துள்ளார்.

இதனையடுத்து, மேலதிக வகுப்பு ஆசிரியர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன் கைக் குண்டை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், இந்த கைக் குண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைக்குண்டு ஒன்றை மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்ற மாணவனால் பரபரப்பு  கண்டி, ஹசலக்க பிரதேசத்தில் மாணவர் ஒருவர் கைக்குண்டு ஒன்றை மேலதிக வகுப்புக்குக் கொண்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் இந்த கைக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், இந்த மாணவன் கைக் குண்டை தனது மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மேலதிக வகுப்பு ஆசிரியரிடம் அதனைக் காண்பித்துள்ளார்.இதனையடுத்து, மேலதிக வகுப்பு ஆசிரியர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன் கைக் குண்டை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.பின்னர், இந்த கைக் குண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement