கொழும்பின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகமானது திடீரென தடைப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் உள்ள 132kV துணை மின் உற்பத்தி நிலையம் திடீரென செயலிழந்ததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 பிரதேசங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.