இந்தோனேஷியாவில் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 6 பொலிஸார் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது.
பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் பொலிஸ் நிலையம் உள்ளது.
இந்த பொலிஸ் நிலையத்தில் இன்று காலை பொலிஸார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த நபர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை தீடிரென வெடிக்கச்செய்துள்ளார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.