• Sep 19 2024

சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான முடிவு; புகழாரம் சூட்டும் திகம்பரம் எம்.பி.!

Chithra / Sep 2nd 2024, 2:30 pm
image

Advertisement

 

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.

முழுமையான தீர்வைப் பெற்றுக்கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது. என்றார்.

சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான முடிவு; புகழாரம் சூட்டும் திகம்பரம் எம்.பி.  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.முழுமையான தீர்வைப் பெற்றுக்கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement