சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (5) நடைபெற்றது.
சங்கானை பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதும்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.