• May 09 2026

யாழின் முக்கிய பகுதியில் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

Chithra / Feb 21st 2024, 12:54 pm
image

 

யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று  (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில், பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

யாழின் முக்கிய பகுதியில் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்.  யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று  (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில், பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement