• Oct 05 2024

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவு - வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

Chithra / Jan 21st 2024, 1:04 pm
image

Advertisement

 

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நிறைவுபெற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில்,

296 உறுப்பினர்களே வாக்களித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதில் குறிப்பாக மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்திருந்தும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தேர்தலின் வேட்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளதுடன் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உள்ள கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களும் வருகைதந்துள்ளனர்.

மண்டபத்திற்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவு - வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்  இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நிறைவுபெற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில்,296 உறுப்பினர்களே வாக்களித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் குறிப்பாக மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்திருந்தும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குறித்த தேர்தலின் வேட்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளதுடன் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உள்ள கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களும் வருகைதந்துள்ளனர்.மண்டபத்திற்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement