• Oct 06 2024

ஜனாதிபதியிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கேட்பு - அபிவிருத்தி குழு கூட்டத்தில் போட்டு உடைத்த அமைச்சர் டக்ளஸ்..!!

Tamil nila / Feb 16th 2024, 9:50 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்த்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில்  யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் திட்டங்களை எவ்வாறு தயாரித்து நிறைவு செய்தீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது கேள்வி எழுப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து நீங்கள் ஜனாதிபதியிடம் அபிவிருத்தி நிதி கேட்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நான் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பவில்லை யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு திட்டங்கள் தொடர்பாகக் கடிதம் அனுப்பினேன் அவர் அனுப்பி விட்டதாக எனக்கு தெரியப்படுத்தினார்  என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்திக் கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளை அனுப்பிவிட்டு தற்போது திட்டங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என கூற முடியாது.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத நிலை இருந்த போதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது.. 

அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் அவர்கள் நேரடியாக  ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்காக நிதி கேட்டுள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட ஒதுக்கீட்டில் நான் தலையிடப் போவதில்லை என்றார்.


ஜனாதிபதியிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கேட்பு - அபிவிருத்தி குழு கூட்டத்தில் போட்டு உடைத்த அமைச்சர் டக்ளஸ். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்த்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ் வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில்  யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் திட்டங்களை எவ்வாறு தயாரித்து நிறைவு செய்தீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன் போது கேள்வி எழுப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து நீங்கள் ஜனாதிபதியிடம் அபிவிருத்தி நிதி கேட்கவில்லையா என கேள்வி எழுப்பினார்.இதன் போது பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நான் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பவில்லை யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு திட்டங்கள் தொடர்பாகக் கடிதம் அனுப்பினேன் அவர் அனுப்பி விட்டதாக எனக்கு தெரியப்படுத்தினார்  என்றார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்திக் கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளை அனுப்பிவிட்டு தற்போது திட்டங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என கூற முடியாது.மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத நிலை இருந்த போதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளது.மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் அவர்கள் நேரடியாக  ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்காக நிதி கேட்டுள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட ஒதுக்கீட்டில் நான் தலையிடப் போவதில்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement