• Sep 19 2024

தமிழரசு கட்சியினர் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள் -அரியநேத்திரன் நம்பிக்கை..!

Sharmi / Aug 26th 2024, 10:40 am
image

Advertisement

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதை போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பார்த்து திருந்த வேண்டும் என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஆதரவு தருமாறு எவரையும் வற்புறுத்தவில்லை.

அவர்களாக  உணர்ந்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் கொள்கைகளிலே உடன்பாடாக இருக்கின்றார்கள்.

அவர்கள் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள்  எனவும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழரசு கட்சியினர் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள் -அரியநேத்திரன் நம்பிக்கை. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதை போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பார்த்து திருந்த வேண்டும் என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஆதரவு தருமாறு எவரையும் வற்புறுத்தவில்லை.அவர்களாக  உணர்ந்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் கொள்கைகளிலே உடன்பாடாக இருக்கின்றார்கள்.அவர்கள் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள்  எனவும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement