• Oct 06 2024

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சி - மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

Chithra / Oct 6th 2024, 11:08 am
image

Advertisement


முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.

அதி விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில், குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மாணவனை பாடசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சி - மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.அதி விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில், குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மாணவனை பாடசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement