• May 11 2024

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு - இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்! - யாழில் சம்பவம்

Chithra / Jan 26th 2024, 11:13 am
image

Advertisement


கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜெயக்கொடி கார்திபன் எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞன் நேற்று (25) மாலை  ஐஸ்கிறீம் விற்பனையில்  ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ் கிறீம் வாங்குவது போல நடித்து  இளைஞனிடமிருந்த  பணம், மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, 

அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல், வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு - இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் - யாழில் சம்பவம் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜெயக்கொடி கார்திபன் எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று (25) மாலை  ஐஸ்கிறீம் விற்பனையில்  ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ் கிறீம் வாங்குவது போல நடித்து  இளைஞனிடமிருந்த  பணம், மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல், வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement