புத்தளம் - குருநாகல் பிரதான வீதியின் 2ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற லொறியுடன் புத்தளம் பகுதியிலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது தம்பபண்ணி கடற்படை முகாமில் பணிபுரியும் கடற்படை வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாத் தெரிவித்தனர்.
கடற்படை வீரர் நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு செல்லும்போதே குறித்த விபத்துச் செம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை வீரருக்கு ஏற்பட்ட தூக்கத்தின் காரணத்தினாலே வீதியை விட்டு விலகி லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கே.எம் சந்தன பெரேரா என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.
கோர விபத்து. லொறியுடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் - கடற்படை வீரர் ஸ்தலத்தில் உயிரிழப்பு. samugammedia புத்தளம் - குருநாகல் பிரதான வீதியின் 2ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற லொறியுடன் புத்தளம் பகுதியிலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது தம்பபண்ணி கடற்படை முகாமில் பணிபுரியும் கடற்படை வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாத் தெரிவித்தனர்.கடற்படை வீரர் நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு செல்லும்போதே குறித்த விபத்துச் செம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படை வீரருக்கு ஏற்பட்ட தூக்கத்தின் காரணத்தினாலே வீதியை விட்டு விலகி லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.குருநாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கே.எம் சந்தன பெரேரா என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.இதன்போது வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.