பெண் ஒருவர் 3 கணவர்மார்களை ஏமாற்றி விட்டு 4 ஆவதாக வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த வேளை தனது கைக்குழந்தை அழுததால் ஆத்திரமடைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் செங்கல் சூளையில் சக்தி வேல் மற்றும் மல்லேஷ் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர்.
சக்தி வேல்லின் மனைவி கலைவாணி (27) இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளகாதலாக மாறியதால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மல்லேஷை பிரிந்து கலைவாணியால் இருக்க முடியாது போய்யுள்ளது.
அதனால், கலைவாணி தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு, மல்லேஷூடன் புதூர்காடம்பட்டியில் புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
ஆயினும், நாட்கள் நகர கலைவாணியின் குழந்தையின் மீது மல்லேஷூக்கு வெறுப்பு வந்தது. இதனால் வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என்றும் மல்லேஷ் மல்லுக்கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் இருவரும் மது அருந்தி விட்டு உல்லாசமாக இருந்த வேளை குழந்தை அழுதமையால் ஆத்திரம் அடைந்த இருவரும் குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர்.
அதனால் குழந்தை படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளது. ஆனால், மறுநாள்தான், குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து கள்ள காதல் ஜோடி தலை மறைவாகியிருந்த நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கு பின்னர் கலைவாணிக்கு முன்னதாகவே 3 கணவர்கள் இருப்பது பொலிஸாருக்கு தெரியவர திகைப்படைந்துள்ளனர்.
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தை. அடித்து கொன்ற தாய். பரபரப்பு வாக்குமூலம்.samugammedia பெண் ஒருவர் 3 கணவர்மார்களை ஏமாற்றி விட்டு 4 ஆவதாக வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த வேளை தனது கைக்குழந்தை அழுததால் ஆத்திரமடைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் செங்கல் சூளையில் சக்தி வேல் மற்றும் மல்லேஷ் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். சக்தி வேல்லின் மனைவி கலைவாணி (27) இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளகாதலாக மாறியதால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மல்லேஷை பிரிந்து கலைவாணியால் இருக்க முடியாது போய்யுள்ளது. அதனால், கலைவாணி தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு, மல்லேஷூடன் புதூர்காடம்பட்டியில் புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். ஆயினும், நாட்கள் நகர கலைவாணியின் குழந்தையின் மீது மல்லேஷூக்கு வெறுப்பு வந்தது. இதனால் வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என்றும் மல்லேஷ் மல்லுக்கட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் இருவரும் மது அருந்தி விட்டு உல்லாசமாக இருந்த வேளை குழந்தை அழுதமையால் ஆத்திரம் அடைந்த இருவரும் குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர்.அதனால் குழந்தை படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளது. ஆனால், மறுநாள்தான், குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து கள்ள காதல் ஜோடி தலை மறைவாகியிருந்த நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பின்னர் கலைவாணிக்கு முன்னதாகவே 3 கணவர்கள் இருப்பது பொலிஸாருக்கு தெரியவர திகைப்படைந்துள்ளனர்.