யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு மீனவர்களையும், அவர்களது கடற்றொழில் சொத்துக்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர் என்றும் இதன்போது எவ்வித சுருக்கு வலைகளும் அகப்படவில்லை என்பதுடன் அதிகளவு தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.