• Sep 19 2025

வழிவிடுமாறு கூறிய வைத்தியரை தாக்கிய கும்பல்; தாக்கியவர்களை கைது செய்யாத பொலிஸ்

Chithra / Sep 18th 2025, 3:50 pm
image

யாழ்ப்பாணம் - உரும்பிராய்  வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்யாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார் 

இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.

இதன்போது குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர்மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

இதன்போது அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. 

குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் பொலிஸார்  விடுவித்தமையானது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வழிவிடுமாறு கூறிய வைத்தியரை தாக்கிய கும்பல்; தாக்கியவர்களை கைது செய்யாத பொலிஸ் யாழ்ப்பாணம் - உரும்பிராய்  வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்யாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார் இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.இதன்போது குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர்மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.இதன்போது அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் பொலிஸார்  விடுவித்தமையானது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement