• Sep 30 2024

விமானத்திற்குள் யுவதிக்கு நடந்த கொடூரச் சம்பவம் - இந்திய பிரஜை கைது..!samugammedia

Tamil nila / Dec 14th 2023, 7:31 am
image

Advertisement

விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  49 வயதுடைய இந்திய பிரஜை என தெரியவருகின்றது.

இலங்கையை சேர்ந்த 8 வயதுடைய சிறுமியே இச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பரிசோதனைக்காக விமான  நிலைய பொலிஸாரால்  நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானத்திற்குள் யுவதிக்கு நடந்த கொடூரச் சம்பவம் - இந்திய பிரஜை கைது.samugammedia விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்  49 வயதுடைய இந்திய பிரஜை என தெரியவருகின்றது.இலங்கையை சேர்ந்த 8 வயதுடைய சிறுமியே இச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.நேற்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சிறுமி பரிசோதனைக்காக விமான  நிலைய பொலிஸாரால்  நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement