மின் கட்டணத்தை அதிகரிக்க விடாமல் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தடையாக இருப்பதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது.
அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அரசின் யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அந்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனக ரத்நாயக்க தெரித்துள்ளார்.