• Sep 20 2024

காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்தில் சர்வதேசமே நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்- ரவிகரன் வேண்டுகோள்..!

Sharmi / Aug 1st 2024, 12:23 pm
image

Advertisement

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்து விட்டார்கள். சர்வதேசம் தான் துணை நின்று இவர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு விடயத்திற்காக 15 வருடமாக தங்களுடைய உறவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார்கள். 

அரசாங்கமானது ஓமந்தை, வட்டுவாகல், கடல், வேறு முகாம்களிலும் சரி உறவுகளை நேரடியாக கொண்டு சென்று ஒப்படைத்திருந்தார்கள். ஒப்படைத்த உறவுகளை தான் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு இணைத்து விடுங்கள் என கேட்டு நிற்கிறார்கள். 

இதனைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அல்லது இனவாத அரசாங்கம் இதனை கூட செய்ய முடியாமல் நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று, ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மக்களுக்குரிய விடையை  அவர்கள் கூற வேண்டும்.

இதற்கு சர்வதேசம்தான் எங்களோடு துணை நிற்க வேண்டும். இதற்குரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். இந்த உறவுகளை தேடித்தர வேண்டும். என்று கூறியே இங்கே போராடி கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு போராட்டங்களை போராடிய பல பேர்  இறந்து விட்டார்கள். 

தாய்மார் இறந்துவிட்டார்கள், தகப்பன்மார் இறந்துவிட்டார்கள், அவர்கள் கேட்பது என்ன? எங்களுடைய உறவுகளை, எங்களிடம் ஒப்படையுங்கள். இதைக்கூட செய்ய முடியாத ஒரு அரசாங்கம் நீங்கள் உங்களிடம் ஒப்படைத்தவர்களை நீங்கள் மீள கொண்டு வந்து கொடுப்பதற்கோ அதற்கான ஒரு முடிவுகளை தெரிவிப்பதற்கோ, முடியாத நிலையில் கையாலாகாத தனமாகத்தான், நீங்கள் இருக்கின்றீர்கள்.  சர்வதேசமாவது கூடிய கவனமெடுத்து இந்த உறவுகளுடைய கோரிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்தில் சர்வதேசமே நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்- ரவிகரன் வேண்டுகோள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்து விட்டார்கள். சர்வதேசம் தான் துணை நின்று இவர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு விடயத்திற்காக 15 வருடமாக தங்களுடைய உறவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார்கள். அரசாங்கமானது ஓமந்தை, வட்டுவாகல், கடல், வேறு முகாம்களிலும் சரி உறவுகளை நேரடியாக கொண்டு சென்று ஒப்படைத்திருந்தார்கள். ஒப்படைத்த உறவுகளை தான் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு இணைத்து விடுங்கள் என கேட்டு நிற்கிறார்கள். இதனைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அல்லது இனவாத அரசாங்கம் இதனை கூட செய்ய முடியாமல் நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று, ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மக்களுக்குரிய விடையை  அவர்கள் கூற வேண்டும்.இதற்கு சர்வதேசம்தான் எங்களோடு துணை நிற்க வேண்டும். இதற்குரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். இந்த உறவுகளை தேடித்தர வேண்டும். என்று கூறியே இங்கே போராடி கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு போராட்டங்களை போராடிய பல பேர்  இறந்து விட்டார்கள். தாய்மார் இறந்துவிட்டார்கள், தகப்பன்மார் இறந்துவிட்டார்கள், அவர்கள் கேட்பது என்ன எங்களுடைய உறவுகளை, எங்களிடம் ஒப்படையுங்கள். இதைக்கூட செய்ய முடியாத ஒரு அரசாங்கம் நீங்கள் உங்களிடம் ஒப்படைத்தவர்களை நீங்கள் மீள கொண்டு வந்து கொடுப்பதற்கோ அதற்கான ஒரு முடிவுகளை தெரிவிப்பதற்கோ, முடியாத நிலையில் கையாலாகாத தனமாகத்தான், நீங்கள் இருக்கின்றீர்கள்.  சர்வதேசமாவது கூடிய கவனமெடுத்து இந்த உறவுகளுடைய கோரிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement